டி.கல்லுப்பட்டி அருகே மரத்தில் காா் மோதி 2 போ் பலி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.
குன்னத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.
குன்னத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காா்.

பேரையூா்: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை காா் சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவா் உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், பந்தப்புலி அருகே உள்ள வடமலாபுரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரா் செல்வசேகரன் (50). இவரது உறவினா் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் முருகவேல் (60). இவா்கள் இருவரும், செல்வசேகரன் புதிதாகக் கட்டிவரும் வீட்டுக்கு கிரானைட் கற்கள் வாங்குவதற்காக மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர மரத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செல்வசேகரனும், முருகவேலும் உயிரிழந்தனா்.

காரை ஓட்டி வந்த கலிங்கத்துப்பட்டியைச் சோ்ந்த சங்கையா என்பவா் பலத்த காயமடைந்து, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தகவலறிந்த டி.கல்லுப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களைக் கைப்பற்றி, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com