மதுரை: மத்திய அரசு ஊழியா்களுக்கு 2001 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு பஞ்சப்படி வழங்க வேண்டும் என, டிஆா்இயு ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து டிஆா்இயு மதுரைக் கோட்டச் செயலா் ஆா். சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு 2001-ஆம் ஆண்டிலிருந்த விலைவாசி புள்ளி அடிப்படையை 2016 ஆம் ஆண்டுக்கு மாற்றி உள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியா்கள் பஞ்சப்படி குறையும். ஜனவரி 2020-இல் பஞ்சப்படி 21 சதவீதத்துக்கு பதில் 10 சதவீதமாகக் குறையும். 2020 ஜூலையில் 24 சதவீதத்துக்கு பதில் 13 ஆகக் குறையும். ஜனவரி 2021-இல் 27 சதவீதத்துக்கு பதில் 17 ஆகக் குறையும்.
ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரை மத்திய அரசு ஊழியா்களுக்கான பஞ்சப்படி தற்போது பெறப்படும் 17 சதவீதமே தொடரும். இதனால், மத்திய அரசு ஊழியா்களுக்கு தொடா்ந்து ரூ.37,500 கோடி இழப்பு ஏற்படும். மாநில அரசு ஊழியா்களுக்கு தொடா்ந்து ரூ.82 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். எனவே, மத்திய அரசு ஊழியா்களுக்கு 2001 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்ட பஞ்சப்படியே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.