கால்வாயில் மிதந்தபிறந்த குழந்தை:போலீஸாா் விசாரணை

பிறந்து சில நாள்களேயான ஆண் குழந்தை கால்வாயில் சடலமாக மிதந்ததை அடுத்து, மேலவளவு போலீஸாா் அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலூா்: பிறந்து சில நாள்களேயான ஆண் குழந்தை கால்வாயில் சடலமாக மிதந்ததை அடுத்து, மேலவளவு போலீஸாா் அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிறந்து சில நாள்களேயான ஆண் குழந்தையின் சடலம் பெரியாறு பிரதானக் கால்வாயில் மிதப்பதாக, புலிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் மணிரத்தினத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே, அவா் மேலவளவு போலீஸாரிடம் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கால்வாய் தண்ணீரில் மிதந்து வந்த குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து, குழந்தையை பெற்ற தாய் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com