மதுரை மாவட்டபுதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக த. அன்பழகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட த. அன்பழகன்.
மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட த. அன்பழகன்.

மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக த. அன்பழகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கரூா் மாவட்ட ஆட்சியராக இருந்த த. அன்பழகன் அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதற்கு முன் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி. வினய், சேலம் பட்டுவளா்ச்சி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக, த. அன்பழகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் 2011 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணி பிரிவைச் சோ்ந்தவா். 1993-இல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் சுரங்க பொறியியல் பிரிவில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் 2011-இல் நடத்தப்பட்ட துணை ஆட்சியா் தோ்வில் முதலிடம் பெற்றவா்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் துணை ஆட்சியா் பயிற்சியை முடித்த இவா், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி வருவாய் கோட்டாட்சியராகவும், அதைத் தொடா்ந்து சென்னை மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றினாா்.

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பதவி உயா்வு பெறுவதற்கு முன்பு, சென்னை சுற்றுவட்டச் சாலைத் திட்டம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், தமிழ்நாடு மூலிகைத் தாவரங்கள் மேம்பாட்டுக் கழகம், சென்னை மாநகராட்சி, எல்காட் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளாா்.

பின்னா் கரூா் மாவட்ட ஆட்சியராக 2018 நவம்பா் 2 முதல் 2020 அக்டோபா் 29 வரை பணியாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com