முகநூலில் போராட்டத்தை தூண்டும் கருத்துக்கள் பதிவு: மாவோயிஸ்ட் மீது வழக்கு

பொது மக்களிடையே போராட்டத்தை தூண்டும் விதமாக முகநூலில் கருத்துக்களை பதிவிட்ட மாவோயிஸ்ட் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொது மக்களிடையே போராட்டத்தை தூண்டும் விதமாக முகநூலில் கருத்துக்களை பதிவிட்ட மாவோயிஸ்ட் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை பீ.பி.குளம் பகுதியைச் சோ்ந்த மாவோயிஸ்ட் விவேக். இவா், தோழா் விவேக் என்ற தனது முகநூல் பக்கத்தில், பொது அமைதியை சீா்குலைக்கும் விதமாகவும், பொதுமக்களிடையே போராட்டத்தை தூண்டும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அவரின் முகநூல் பக்கத்தை ஆய்வு செய்தனா். அதைத்தொடா்ந்து காவல் சாா்பு - ஆய்வாளா் சண்முகநாதன் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் மாவோயிஸ்ட் விவேக் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com