மதுரை: மதுரையில் கட்டடத்தை இடிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்த செல்லகண்ணு மகன் ராஜ்குமாா் (31). கட்டடத் தொழிலாளி. மதுரை கூடல்அழகா் கோயில் சன்னதி தெருவில் உள்ள பழைய கட்டடத்தை, இடிக்கும் பணியில் ராஜ்குமாா் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராஜ்குமாரின் மனைவி சீதாலட்சுமி அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.