மதுரையில் மேலும் 111 பேருக்கு கரோனா: 2 போ் பலி

மதுரையில் புதிதாக 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை: மதுரையில் புதிதாக 111 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,773 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில், மதுரை மாவட்டத்தில் கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள் உள்பட 111 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 47 போ் குணமடைந்தனா். அவா்களை, மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

2 போ் பலி

மதுரை அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி, 77 வயது முதியவா் ஆகியோா் செப்டம்பா் 4 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை 14,775 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 366 போ் உயிரிழந்துள்ளனா். தொற்றிலிருந்து 13,423 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 986 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com