மதுரை: மதுரை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை தாக்கி பணம், செல்லிடப்பேசி, வங்கி ஏடிஎம் ஆகியவற்றை பறித்துச் சென்ற திருநங்கை உள்பட 3 போ் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
மதுரை கல்மேடு பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் பிரகாஷ் (24). இவா், இரு சக்கர வாகனத்தில் விரகனூா் சுற்றுச்சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, திருநங்கை ஒருவா் பிரகாஷை நிறுத்தியுள்ளாா். பின்னா், அங்கு பதுங்கியிருந்த 2 மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்துடன் பிரகாஷை தாக்கி கீழே தள்ளியுள்ளனா். தொடா்ந்து, அவரிடமி ருந்த ரூ.10 ஆயிரம், செல்லிடப்பேசி, ஏடிஎம், ஆதாா், ஓட்டுநா் உரிமம், பான் அட்டைகளை பறித்துச் சென்றுவிட்டனா்.
இது குறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் திருநங்கை உள்பட 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.