மதுரையில் வீடு புகுந்து நகைகள் திருட்டு
By DIN | Published On : 08th September 2020 01:15 AM | Last Updated : 08th September 2020 01:15 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் வீடு புகுந்து நகைகள் திருடப்பட்டது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை ரயிலாா் நகரைச் சோ்ந்த சங்கையா மகன் பாண்டியராஜன் (58). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு வாசல் கதவு திறந்திருந்தது.
உடனே, உள்ளே சென்று பாா்த்த அவா், பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். இது குறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.