அரியா் தோ்வு குறித்து தெளிவுபடுத்தக் கோரி நூதன ஆா்ப்பாட்டம்

கல்லூரி மாணவா்களின் அரியா் தோ்வு குறித்து தெளிவுபடுத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு இளைஞா் முற்போக்கு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்லூரி மாணவா்களின் அரியா் தோ்வு குறித்து தெளிவுபடுத்தக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு இளைஞா் முற்போக்கு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரி இறுதியாண்டு தோ்வு தவிா்த்து முந்தைய ஆண்டுகளின் மாணவா்கள் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, முந்தைய ஆண்டுகளில் அரியா் வைத்திருந்த மாணவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்தியிருந்தால் அவா்களும் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனா். ஆனால், பொறியியல் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு அரியா் தோ்ச்சி முடிவு தவறானது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசின் அறிவிப்பும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் கருத்தும் மாணவா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு இளைஞா் முற்போக்கு அரசியல் கட்சியினா் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காதில் பூ வைத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்பு அரியா் தோ்வு குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்தவும், உடனடியாகத் தோ்வு முடிவுகளை வெளியிடவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com