பழுதான அடுக்குமாடிக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு நோட்டீஸ்

மதுரை பசுமலையில் வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், வீடுகளை காலி செய்யுமாறு குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை பசுமலையில் வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், வீடுகளை காலி செய்யுமாறு குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை பசுமலையில் அரசினா் தொழிலாளா் காலனி பகுதியில் 2-இல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. இங்கிருக்கும் 240 வீடுகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இதனால் வீட்டைக் காலிசெய்யுமாறு குடியிருப்புவாசிகளுக்கு நேரிலும், நோட்டீஸ் மூலமாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, குடியிருப்புகளை உடனடியாகக் காலி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் செப். 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு, காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் காலிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com