தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து

மதுரையில் புகைப்படங்களுக்கு சட்டங்கள் (ஃபிரேம்) தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மதுரையில் புகைப்படங்களுக்கு சட்டங்கள் (ஃபிரேம்) தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மதுரை ஜீவா நகா் அருகேயுள்ள அம்பேத்கா் நகரில் கணேசன் என்பவா் புகைப்படங்களுக்கு சட்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுவனத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்ட

நிலையில், நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகில் உள்ளவா்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரா்கள், 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மின் கசிவு காரணமாக இத் தீ விபத்து ஏற்பட்டதாக, போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com