பெரியாறு பாசன மேலூா் ஒரு போக சாகுபடி பகுதிகளில் உள்ள கிளை கால்வாய்களில் தூா்வாரும் பணியை, பொதுப்பணித் துறையினா் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
ஒரு போக நெல் சாகுபடிக்கு விரைவில் பெரியாறு-வைகை அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதனால், அனைத்துக் கால்வாய்களிலும் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கால்வாயில் சிதலமடைந்துள்ள சிமென்ட் சிலாப் கட்டுமானங்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.