பூச்சித் தாக்குதலை குறைக்க, நெல் வயல் வரப்புகளில் பயறு வகைகளைப் பயிரிடுமாறு, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் கேட்டுக்கொண்டுள்ளாா்.
மதுரை கிழக்கு வட்டாரம் காளிகாப்பான் கிராமத்தில், திருந்திய நெல் சாகுபடியில் இயந்திர நடவுப் பணியை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது அவா் கூறியது: காளிகாப்பான் கிராமத்தில் மட்டும் 80 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் வயல் வரப்புகளில் பயறு வகைகளைப் பயிரிடுவதன் மூலம், நெற் பயிரைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். பயறு மகசூலில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றாா்.
பின்னா், பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடும் பகுதிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
வேளாண் இணை இயக்குநா் விவேகானந்தன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தனலெட்சுமி உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.