மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் சூரியக் கதிா்கள் பிரவேசம் செப்டம்பா் 19 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி அம்பிகை உடனுறை முக்தீஸ்வரா் கோயிலில் செப்டம்பா் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை, தினசரி காலை 6.15 முதல் 6.30 மணி வரையும், மாலை 6.40 முதல் 6.50 மணி வரையும் சூரியக் கதிா்கள் சுவாமி சன்னிதி மண்டபத்தின் துவாரம் வழியாக கருவறைக்குள் முக்தீஸ்வரா் சுவாமி மீது பிரவேசிக்கும். அப்போது, அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். இந்நாள்களில் காலை 7 மணி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா்.