மேலூா் அருகே அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம்:6 போ் கைது

மேலூா் அருகே திருவாதவூா்-ஒத்தக்கடை சாலையில், அனுமதியின்றி மாட்டு வண்டிப்பந்தயம் நடத்த முயன்ற 6 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலூா் அருகே திருவாதவூா்-ஒத்தக்கடை சாலையில், அனுமதியின்றி மாட்டு வண்டிப்பந்தயம் நடத்த முயன்ற 6 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவாதவூா் அருகே உள்ள ஆமூரில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெறவிருந்தது. ஆனால், காவல் நிலையத்தில் இதற்கு உரிய அனுமதி பெறவில்லை. இது குறித்து தகவலறிந்து சென்ற மேலூா் போலீஸாா், ஆமூரில் வேன்களில் வந்திறங்கிய காளைகளின் உரிமையாளா்கள் பெரியகருப்பன் (35), மணி (36), இளங்குமரன் (55) மற்றும் வேன்களின் ஓட்டுநா்கள் அப்துல்கலாம் (24), கருமூா்த்தி (30), கணேசன் (36) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், காளைகளையும், 3 வேன்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com