முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.38 கோடி அபராதம் வசூல்

மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து கடந்த 3 மாதங்களாக அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டது. மதுரை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளின் அலுவலா்கள், காவல் துறையினா், பொதுமுடக்க விதிகளைக் கண்காணிப்பதற்கான சிறப்பு பறக்கும் படை குழுவினா் தனித்தனியே அபராதம் விதித்து வருகின்றனா். மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 78 ஆயிரத்து 649 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரத்து 150 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com