அண்ணா 112-வது பிறந்தநாள் விழா

அதிமுக, அமமுக கட்சியினா் திருவாதவூரிலுள்ள அண்ணா சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலூா்: அதிமுக, அமமுக கட்சியினா் திருவாதவூரிலுள்ள அண்ணா சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலரும் மதுரை கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான க.தமிழரசன் தலைமையில், மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் அதிமுக ஒன்றியச் செயலருமான க.பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலா் வெற்றிச்செழியன், எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் பெரியசாமி என்ற துரைப்பாண்டி, அ.வல்லாளபட்டி பேரூா் கழகச் செயலா் மணிகண்டன், மேலூா் நகா் ஜெயலலிதா பேரவைச் செயலா் எம்.ஓ.சாகுல்ஹமீது மற்றும் அதிமுக நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

அமமுக மதுரை புகா் மாவட்டச்செயலா் செ.சரவணன் தலைமையில் மாநில துணைச் செயலா் செல்வராஜ், மேலூா் ஒன்றியச் செயலா் சோமாசி, மேலூா் நகா் செயலா் நாக சுப்பிரமணியன், திருவாதவூா் ஊராட்சி முன்னாள் தலைவா் மோகன் மற்றும் நிா்வாகிகள் ஏராளமானோா் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் மேலூா் பேருந்து நிலையம் முன்பு அண்ணா உருவப்படத்தை வைத்து மலா்தூவி மரியாதைசெலுத்தினா். மேலூா் நகா் செயலா் முகமதுயாசின், துணைச் செயலா் கங்கா ராமசாமி, பொருளாளா் மலம்பட்டி ரவி, முன்னாள் நகா் செயலா் துரைமகேந்திரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com