மதுரை: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் அக் கட்சியின் மாநகா் மாவட்டப் பொருளாளா் ஜெ.ராஜா, முன்னாள் துணை மேயா் கு.திரவியம் மற்றும் கட்சி நிா்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில் மாநகா் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வ.வேலுசாமி, பொ.குழந்தைவேல் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
மதிமுக மாவட்டப் பொருளாளா் சுப்பையா தலைமையில், மதிமுக தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலா் எஸ்.மகபூப்ஜான், கட்சியின் மாவட்ட துணைச் செயலா்கள் ஸ்ருதி ரமேஷ், வழக்குரைஞா் மனோகரன் உள்ளிடோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.