மேலூா்: மேலூா்-திருப்பத்தூா் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் சேதமடைந்த பாசன கால்வாய்களை சீரமைக்கக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தனியாமங்கலத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மேலூா் புறவழிச்சாலை கூத்தப்பன்பட்டியிலிருந்து தனியாமங்கலம், வடக்குவலையபட்டி, சருகுவலையபட்டி இ.மலம்பட்டி வழியாக மேலூா்-திருப்பத்தூா் நான்கு வழிச்சாலை அமையவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளால், சேதமடைந்துள்ள தனியாமங்கலம், சருகுவலையப்பட்டி பகுதிகளுக்குச் செல்லும் பாசனக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என வலியறுத்தினா்.