மதுரை: பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இ-சேவை மையங்கள் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி:
மதுரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வட்டாட்சியா் அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் வழங்கலாம்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் வட்ட அலுவலகங்களில் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் ரசீது வழங்கப்படும். இதேபோல இ-சேவை மையங்களில் பெறப்படும் மனுக்கள் இணையவழி கோரிக்கைகளாகப் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் ரசீது வழங்கப்படும் என்றாா்.