கோரிக்கை மனுக்களை இ-சேவை மையங்கள் வழியாக சமா்ப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இ-சேவை மையங்கள் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இ-சேவை மையங்கள் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு சமா்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வட்டாட்சியா் அலுவலகங்கள், இ-சேவை மையங்களில் வழங்கலாம்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் வட்ட அலுவலகங்களில் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் ரசீது வழங்கப்படும். இதேபோல இ-சேவை மையங்களில் பெறப்படும் மனுக்கள் இணையவழி கோரிக்கைகளாகப் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் ரசீது வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com