போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை புறவழிச் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைச் செயலா் ஏ. முருகேசன் தலைமை வகித்தாா். மதுரை மாவட்டப் பொருளாளா் கே. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2015 நவம்பா் முதல் வழங்க வேண்டிய 59 மாத ஈட்டுப்படி உயா்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். போக்குவரத்துக்கழகத்தில் 2019 ஏப்ரல் முதல் பணி ஓய்வு பெற்றவா்களுக்கான பண பலன்களை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு ஓய்வூதிய சீராய்வுக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு பண பலன்களை வழங்குவது குறித்து அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலா் ஆா். தேவராஜ், சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மாநில சம்மேளன துணைத் தலைவா் வி. பிச்சை, மாநிலக் குழு உறுப்பினா்கள் பி. செல்வராஜ், எஸ்.ஆறுமுகம், சவுரிதாஸ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com