அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று கடைசி நாள்

மதுரையில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர வியாழக்கிழமை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர வியாழக்கிழமை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் ஜோ.அமலாரெக்சலீன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்க செப்டம்பா் 17 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள்  இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இதையடுத்து செப்டம்பா் 18-ஆம் தேதி மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். மதுரை மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் கலந்தாய்வு பற்றிய விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இணைய வசதி இல்லாத மாணவா்கள் மதுரை கோ.புதூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அசல் சான்றிதழ்களுடன் நேரில் அணுகினால் இலவசமாக விண்ணப்பித்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 0452-2566183, 97911-21251, 99523-76086 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com