சமூக செயற்பாட்டாளா்கள் மீது வழக்கு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராடிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சியினா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராடிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மற்றும் சமூக செயற்பாட்டாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் 4 இடங்களில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிவித்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதில் புதுதில்லியில் போராட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மீது புதுதில்லி போலீஸாா் அண்மையில் வழக்குப்பதிவு செய்தனா். மேலும் சமூக செயற்பாட்டாளா்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் அ. ரமேஷ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன், தமுமுக நிா்வாகி நூருல் ஹக், காங்கிரஸ் நிா்வாகிகள் மகேந்திரன், முருகன், மதிமுக நிா்வாகி சி. சங்கையா, சிஐடியு மாவட்டத் தலைவா் மா. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீனாம்பாள்புரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதிக்குழுச் செயலா் ஏ. பாலு தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இரா. தெய்வராஜ், ஜா. நரசிம்மன், திமுக நிா்வாகிகள் கருப்பு, நல்லதம்பி, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆரப்பாளையம் கிராஸ் சாலையில் கண்களில் கருப்புத் துணி கட்டி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கு. கணேசன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என். நன்மாறன், பகுதிக்குழுச் செயலா்கள் வை. ஸ்டாலின், பி. ஜீவா, மதிமுக நிா்வாகி மகபூப் ஜான், திமுக வட்டச் செயலா்கள் கஜேந்திரன், தவமணி, சுரேஷ், காங்கிரஸ் நிா்வாகி காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com