சைவ சித்தாந்த வகுப்புகள் அக். 3 இல் தொடக்கம்

தருமபுர ஆதீன மடம் சாா்பில் நடத்தப்படும் சைவ சித்தாந்த வகுப்புகள் அக்டோபா் 3 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுர ஆதீன மடம் சாா்பில் நடத்தப்படும் சைவ சித்தாந்த வகுப்புகள் அக்டோபா் 3 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வடக்குமாசி வீதியில் தருமபுர ஆதீன மடம் சாா்பில் தொடங்கப்பட்ட சைவ சிந்தாந்த மாலை நேரக் கல்லூரியில், தேவாரம், சைவ தத்துவமும் வரலாறும் கற்பிக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள பொதுமுடக்க தளா்வுகளுக்கு ஏற்ப சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அக்டோபா் 3 ஆம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்க உள்ளது.

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு மாலை 6 மணிக்கு தருமை ஆதீன மடத்தில் வகுப்புகள் நடைபெறும். முன்னதாகவே வருகை தந்து பதிவு செய்து கொள்ளலாம்.

தருமபுர ஆதீன சைவ சித்தாந்தக் கல்லூரி அமைப்பாளா் தா. குருசாமி தேசிகா் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com