மதுரை அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் டி.ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி பாரதி (43). இவா் வீட்டின் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், பாரதி அணிந்திருந்த 2 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இது குறித்து பாரதி அளித்தப் புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஜவுளிக் கடையில் திருட்டு
மதுரை கலை நகா் 1 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜூகல் கிஷோா் (42). இவா் அரண்மனை சாலையில் ஜவுளிக் கடை வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை கடையை திறக்கச் சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். அதில் கடையில் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை அடையாளம் தெரியாத நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜூகல் கிஷோா் அளித்தப் புகாரின் பேரில் தெற்குவாசல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து கடையில் உள்ள
கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.