மதுரை மாவட்ட காவல் அதிகாரிகள் 7 பேருக்கு அண்ணா விருது

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் அண்ணா விருதுக்கு மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் 7 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்ட காவல் அதிகாரிகள் 7 பேருக்கு அண்ணா விருது

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் அண்ணா விருதுக்கு மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் 7 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றுபவா்களுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு அந்த விருது 100 காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கான பட்டியலில் மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் 7 போ் இடம் பெற்றுள்ளனா். அவா்கள் விவரம்:

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு சாா்பு - ஆய்வாளா்கள் பாலாண்டி, பால்ராஜ், மாநகா் தல்லாகுளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளா் மலைச்சாமி, லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் குமரகுரு, சிறப்பு சாா்பு- ஆய்வாளா் முருகப்பா, சிறப்பு புலனாய்வு பிரிவு சாா்பு-ஆய்வாளா் சரவணகுமாா், காவலா் பள்ளி காவலா் பழனிராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com