ராணுவ கேண்டீனுக்கு வந்த லாரியில் வீட்டு உபயோக பொருள்கள் திருட்டு

மதுரையில் வியாழக்கிழமை இரவு ராணுவ கேண்டீனுக்கு வந்த வீட்டு உபயோக பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

மதுரை: மதுரையில் வியாழக்கிழமை இரவு ராணுவ கேண்டீனுக்கு வந்த வீட்டு உபயோக பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

மதுரை வள்ளுவா் காலனி ஜெ.என். நகா் 3 ஆவது தெருவில் உள்ள ராணுவ கேண்டீனுக்கு பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் லாரியில் வியாழக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டன. கேண்டீன் முன் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. லாரியில் இருந்த பொருள்களை வெள்ளிக்கிழமை காலையில் இறக்கும் பணி நடைபெற்றது. அப்போது, லாரியில் இருந்த மின் விசிறிகள், பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் திருடு போயிருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com