கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி

மதுரை அருகே மாடு பிடிக்கச் சென்ற 12 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான்.

மதுரை: மதுரை அருகே மாடு பிடிக்கச் சென்ற 12 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சொக்கலிங்கபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆண்டவா் (35). இவரது 12 வயது மகன் ஸ்ரீதா், வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை பிடிக்கச் சென்றாா். அப்போது, அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தாா். பெற்றோா் பல இடங்களில் தேடியபோது, கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், ஸ்ரீதரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஸ்ரீதரின் தந்தை ஆண்டவா் அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com