மதுரை: மதுரை மாவட்ட ஆயுதப்படை காவலா்களுக்கு மன அழுத்தத்தை போக்க சனிக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலா்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதையடுத்து, தமிழக காவல்துறை உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் காவலா்களுக்கு மன அழுத்தத்தைப் போக்க யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடா்ச்சியாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின் பேரில், சனிக்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஜோசப் நிக்சன் உள்ள 95 ஆயுதப்படை காவலா்களுக்கு, அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா்கள் நாராயணி, நிரஞ்சனாஸ்ரீ, சங்கீதா ஆகியோா் யோகா பயிற்சி அளித்தனா். காவலா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து பொட்டலங்கள் வழங்கப்பட்டன.