மாட்டுத்தாவணி காய்கனி சந்தைநேரத்தை மாற்றக் கோரிக்கை

மாட்டுத்தாவணி காய்கனி சந்தை செயல்படும் நேரத்தை பொதுமுடக்கத்துக்கு முன்பு இருந்தவாறு மாற்றி அமைக்க, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை: மாட்டுத்தாவணி காய்கனி சந்தை செயல்படும் நேரத்தை பொதுமுடக்கத்துக்கு முன்பு இருந்தவாறு மாற்றி அமைக்க, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக மாட்டுத்தாவணி சந்தை மாத வாடகை காய்கறி வியாபாரிகள் நலச் சங்கத்தினா், ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:

கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் செயல்பட்ட கடைகள் பல்வேறு இடங்களுக்கும் மாற்றப்பட்டன. வியாபார நேரம் இரவு 12 முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டது. தற்போது வரை அதே நேரம் நீடிக்கிறது.

ஆனால், தினமும் அதிகாலை 5 மணிக்குதான் வியாபாரம் தொடங்குகிறது. எனவே, பொது முடக்கத்துக்கு முன்பு இருந்ததைப் போல வியாபார நேரத்தை அனுமதிக்க வேண்டும்.

அதேபோல், மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும். பூட்டியிருந்த காலத்துக்கு கடை வாடகையை தள்ளுபடி செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com