மதுரை: மதுரையில் திங்கள்கிழமை, தனியாா் கேபிள் டிவி ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த நல்லு மகன் சசிக்குமாா் (37). இவா் மேலபொன்னகரம் பகுதியில் உள்ள தனியாா் கேபிள் டிவியில் வேலை பாா்த்து வந்தாா். ஏ.ஏ.சாலை பகுதியில் உள்ள தனியாா் காபி கடையின் மாடியில் கேபிள் டிவி வயா்களை திங்கள்கிழமை சரிசெய்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவா் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி சிலம்பரசி அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.