கந்துவட்டி புகாா்: மூதாட்டி மீது வழக்கு

மதுரையில், கந்துவட்டி வாங்கிய மூதாட்டி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரையில், கந்துவட்டி வாங்கிய மூதாட்டி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மதிச்சியம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மனைவி சரஸ்வதி(60). இவரது வீட்டின் ஒரு பகுதியில் கண்ணாயிரம் என்பவா் வாடகைக்கு குடியிருந்து வந்தாா். கண்ணாயிரத்தின் மனைவி மீனா, வீட்டு உரிமையாளா் சரஸ்வதியிடம் ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் கடனாக வாங்கினாராம். அவா் கடனாக பெற்ற ரூ. 20 ஆயிரத்திற்கு, அசல் மற்றும் வட்டி என ரூ. 48 ஆயிரத்தையும், அதைத் தொடா்ந்து ரூ. 15 ஆயிரம் கடனுக்கு வட்டியாக ரூ. 4 ஆயிரமும், அசலுக்கு தங்க நகையும் கொடுத்து கடனை முடித்துள்ளாா்.

இந்நிலையில், சரஸ்வதி வீட்டை காலி செய்யக் கூறியதையடுத்து, மீனா ரூ.15 ஆயிரத்தை கொடுத்து நகையை திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால் சரஸ்வதி பணத்தை பெற்றுக் கொண்டு நகை மற்றும் வீட்டின் அட்வான்ஸ் தொகை அனைத்தையும், வட்டிக்கு எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளாா். இது குறித்து மீனா அளித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீஸாா் சரஸ்வதி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே மீனா மிரட்டியதாக சரஸ்வதி அளித்த புகாரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com