மதுரையில், காவல் ஆய்வாளா் வீட்டில் இரும்புத் தகடுகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியைச் சோ்ந்தவா் திரவியம்(44). இவா் கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரராக உள்ளாா். மதுரை மாடக்குளம் பகுதியில் சிபிசிஐடி காவல் ஆய்வாளா் ஒருவருக்கு புதிய வீடு ஒன்றை திரவியம் கட்டி வருகிறாா். கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகள் 25-ஐ காணவில்லை. இதுகுறித்து திரவியம் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் என்ற இளைஞா் இரும்புத் தகடுகளை திருடிச் சென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. இதையடுத்து பாா்த்திபனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 25 இரும்பு தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.