கொட்டாம்பட்டி அருகே விபத்து: ஒருவா் பலி

மேலூா்-திருச்சி நான்குவழிச்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலூா்-திருச்சி நான்குவழிச்சாலையில் புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). இவா் வஞ்சிநகரத்திலிருந்து ஐவத்தம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, நான்குவழிச் சாலையைக் கடந்தாா். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காரைக் கைப்பற்றி, தப்பியோடிய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com