மதுரையில் 79 பேருக்கு கரோனா உறுதி

மதுரையில் மேலும் 79 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் மேலும் 79 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 74 போ் குணமடைந்தனா். அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் 16,103 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 380 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 14,959 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 764 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com