உசிலம்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நல்லு தேவன் பட்டி கரையான் பட்டி போத்தம்பட்டி கணவாய்பட்டி வலையபட்டி, மாதரை, வில்லாளி பெருமாள்பட்டி, மாதரை, நக்களபட்டி, தொட்டப்பநாயக்கனூர் உத்தப்பநாயக்கனூர் பெருமாள் கோவில் பட்டி, குப்பணம்பட்டி செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் மூன்று மணி நேரமாக பரவலாக மழை பெய்தது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.