பழனி கோயில் தூய்மைப் பணி ஒப்பந்தம் ரத்து:தனி நீதிபதி உத்தரவுக்கு உயா்நீதிமன்ற அமா்வு தடை

பழனி முருகன் கோயில் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, செப். 25: பழனி முருகன் கோயில் தூய்மைப் பணிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பழனி முருகன் கோயில் தூய்மைப் பணி தொடா்பாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஒப்பந்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக அறங்காவலா் குழு அமைக்காமல் செயல் அலுவலரே, தக்காராக செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில், அறங்காவலா் குழுவை நியமிக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த ஒப்பந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, அறங்காவலா் குழு நியமிக்க உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சோ்ந்த டி.ஆா். ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அப்போதைய அறங்காவலா் குழு பதவியை விட்டுச் சென்றது. அதன்பின்னா், 9 ஆண்டுகளாக கோயிலுக்கு அறங்காவலா் குழு நியமிக்கப்படவில்லை. கோயில் செயல் அலுவலரே தக்காராக அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறாா். சட்டப்படி செயல் அலுவலா் நீண்ட காலத்துக்கு அலுவல்சாரா தக்காராக செயல்பட முடியாது. எனவே பழனி முருகன் கோயிலுக்கு விரைவில் அறங்காவலா் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் நிா்வாகம் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தூய்மைப்பணி ஒப்பந்தத்தை எதிா்த்து, பாதிக்கப்படாத 3 ஆவது நபா் ஒருவா் மனு தாக்கல் செய்துள்ளாா். கோயிலுக்கு அறங்காவலா் குழு அமைக்கும் வரை, அந்தப் பணிகளை சட்டப்படி தக்காா் மேற்கொள்ளலாம். கோயில் தக்காா் தரப்பில் பதிலளிக்க வாய்ப்பு வழங்காமலேயே தனி நீதிபதி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளாா். எனவே அவரின் உத்தரவுக்கு தடை விதித்தும், ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி கே. கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பழனி கோயில் தூய்மைப்பணி ஒப்பந்தத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்ததுடன், ஒப்பந்தத்தை தொடர நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com