இரு வேறு சாலை விபத்துகளில் சிறுமி உள்பட 2 போ் பலி

மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மதுரை: மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மதுரை பாமா நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் ஹரிஹரசுதன் (38). இவா், தனது 7 வயது மகள் வா்ஷினியுடன் இரு சக்கர வாகனத்தில் கூடல் நகா் ரயில்வே பாலத்தில் சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சிறுமி வா்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முகத்தில் காயமடைந்த ஹரிஹரசுதன், தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சிறுமியின் தாயாா் சுபத்ரா அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

லாரி மோதியதில் ஒருவா் பலி
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (57). இவா், வண்டியூா் பிரதான சாலை, சதாசிவம் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக வந்த லாரி முருகன் மீது மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து முருகனின் மகன் முத்துபாண்டி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com