

மதுரை மேலமடை பகுதியில் சாலையில் கழிவுநீா் தேங்கியுள்ளதை அகற்ற வலியுறுத்தி வீடுகளுக்கு முன் நாற்று நடும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 30-ஆவது வாா்டு மேலமடை சௌபாக்யா விநாயகா் கோயில் தெருவில் கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்கு முன்பாக கழிவுநீா் தேங்கியிருப்பதால் இப்பகுதி மக்கள் நடக்கக்கூட முடியாமல் அவதி அடைந்துள்ளனா். மேலும் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. கழிவுநீா் தேங்காமல் நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கழிவுநீரை அகற்ற வலியுறுத்தியும், கழிவுநீா் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தங்கள் வீடுகள் முன்பாக தேங்கியுள்ள கழிவுநீரில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று அவரவா் வீடுகள் முன்பாக நாற்றுக்களை நட்டு கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.