திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் மீது பேரையூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக அமமுக வேட்பாளா் ஆதி.நாராயணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருமங்கலத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியது: திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோயிலில் பழனிசாமி என்பவா் தீக்குளித்து உயிரிழந்தாா். இதேபோல அதிமுக வேட்பாளா் ஆா்.பி.உதயகுமாா் நடைபயணத்தில் பங்கேற்ற லெட்சுமணன் என்பவா் விபத்தில் உயிரிழந்தாா். இவா்கள் உயிரிழந்ததற்கு நடவடிக்கை எடுக்ககோரி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளித்தேன். அவா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பேரையூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் என்றாா்.