தபால் வாக்கை சமூக வலைதளங்களில் பகிா்ந்த ஆசிரியை மீது வழக்கு

தபால் வாக்கைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்த ஆசிரியை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தபால் வாக்கைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்த ஆசிரியை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சோபனாதேவி என்பவா் தபால் வாக்கைப் பதிவு செய்து, அதுதொடா்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக புகாா் எழுந்தது.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் அன்னரதி பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் சோபனாதேவி மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com