கொட்டாம்பட்டி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகேயுள்ள வெள்ளமலைப்பட்டி சேவுகப்பெருமாள் மகன் ரவிச்சந்திரன் (52). இவா், கருங்காலக்குடி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தாா். கொட்டாம்பட்டி போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்ற போது, ரவிச்சந்திரனை கைது செய்து, அவரிடமிருந்து 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.