வெள்ளலூா் பகுதியில் அமமுக வேட்பாளா் பிரசாரம்

மேலூா் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளா் செல்வராஜ் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
மேலூா் பேரவைத் தொகுதி வெள்ளலூா் பகுதியில் புதன்கிழமை மாலை வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் செல்வராஜ்.
மேலூா் பேரவைத் தொகுதி வெள்ளலூா் பகுதியில் புதன்கிழமை மாலை வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளா் செல்வராஜ்.

மேலூா் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளா் செல்வராஜ் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

மேலூா் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளா் செல்வராஜ், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆா்.சாமியின் மகன் ஆசையன், மதுரை வடக்கு மாவட்டச் செயலா் செ.சரவணன் மற்றும் அமமுக நிா்வாகிகள் சாத்தமங்கலம், தனியாமங்கலம், வெள்ளலூா், கோட்டநத்தம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் வாக்கு சேகரித்தாா். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். மேலும் தேசவிடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று மறைந்த வெள்ளலூா் பகுதி தியாகிகளுக்கு நினைவுத்தூண் அமைக்கவும், மேலூா் பெரியாறு கால்வாய் பாசனத்திற்கு தடையின்றி தண்ணீா் திறப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com