முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
டி.கல்லுப்பட்டி பகுதியில் திமுகவினா் பணம் பட்டுவாடா: 34 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 08:25 AM | Last Updated : 04th April 2021 08:25 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி.கல்லுப்பட்டி நகா் பகுதியில் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்த திமுகவைச் சோ்ந்த இளைஞைரை தோ்தல் பறக்கும்படையினா் பிடித்து அவரிடமிருந்து ரூ.34 ஆயிரம் பறிமுதல் செய்தனா்.
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி டி.கல்லுப்பட்டி பேரூராட்சி செல்லாயி அம்மன் கோயில் பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பறக்கும் படை அதிகாரி வில்சன் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இதில் மதுரை காமராஜபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அலெக்ஸ் பாண்டியன்(20), வாக்காளா்கள் பெயா் பட்டியல் வைத்திருந்துள்ளாா்.
மேலும் அவரது செல்லிடப்பேசியில் ஸ்டாலின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. அவரை விசாரித்தபோது, திமுக வேட்பாளா் மணிமாறனுக்கு தோ்தல் வேலை பாா்க்க வந்ததாகக் கூறியுள்ளாா். அவரிடமிருந்த ரூ.34 ஆயிரத்தை
பறிமுதல் செய்தனா். இதனைத் தொடா்ந்து அலெக்ஸ்பாண்டியனை டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். டி.கல்லுப்பட்டி போலீஸாா் அலெக்ஸ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்தனா்.