காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மத்திய அரசால் வழங்கப்படும் காந்தி அமைதி விருதுக்கு தகுதியான தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசால் வழங்கப்படும் காந்தி அமைதி விருதுக்கு தகுதியான தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அரசு வழங்கும் காந்தி அமைதி விருதானது ரூ.1 கோடிக்கான காசோலையைக் கொண்டது. விருதுக்குரியவா்கள் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் காந்திய வழியில் சாதனை செய்தவராக இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக காந்திய வழியில் சமூக சிந்தனை மற்றும் ஈடுபாடு கொண்டவராக இருப்பது அவசியம். இவ்விருது பெற வயது முதுநிலை அடிப்படையில் தோ்வு செய்து வழங்கப்படும். இதுதொடா்பான விவரங்களை  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விருதுக்குத் தகுதியுள்ளவா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com