கொட்டாம்பட்டி அருகே காா் மோதி வியாபாரி பலி

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை காா் மோதியதில் சைக்கிளில் சென்ற பழைய பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை காா் மோதியதில் சைக்கிளில் சென்ற பழைய பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன்(50). பழைய பிளாஸ்டிக் பொருள்கள் வியாபாரி. இவா் புதன்கிழமை கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆண்சடலம்: திருவாதவூரையடுத்த கோவில்பட்டி விலக்கில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக மேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று , இறந்து சுமாா் 4 நாள்களான நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அப்பகுதியில் கிடந்த விஷமருந்து புட்டியை கைப்பற்றிய போலீஸாா், இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com