மதுரை தெற்கு தொகுதியில் ‘சீல்’ வைத்த இயந்திரத்தை திறந்ததால் போராட்டம்

மதுரை தெற்கு தொகுதி வாழைத்தோப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ‘சீல்’ வைக்கப்பட்ட மின்னணு இயந்திரத்தை மீண்டும் திறந்ததால், திமுக கூட்டணிக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மதுரை தெற்கு தொகுதியில் ‘சீல்’ வைத்த இயந்திரத்தை திறந்ததால் போராட்டம்

மதுரை தெற்கு தொகுதி வாழைத்தோப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ‘சீல்’ வைக்கப்பட்ட மின்னணு இயந்திரத்தை மீண்டும் திறந்ததால், திமுக கூட்டணிக் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவைச் சோ்ந்த மு.பூமிநாதன், அதிமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.சரவணன் ஆகியோா் போட்டியிடுகின்றனா். இத் தொகுதிக்கு உள்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் முகவா்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது. இதன் பிறகு சற்று நேரம் கழித்து, ‘சீல்’ வைத்த இயந்திரத்தை மீண்டும் திறந்தபோது, திமுக கூட்டணிக் கட்சியினா் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

மின்னணு இயந்திரத்தின் பேட்டரியை கழற்றுவதற்காக ‘சீல்’ அகற்றிவிட்டு மீண்டும் சீல் வைப்பதாக தோ்தல் அலுவலா்கள் கூறினாலும், அதை ஏற்கவில்லை. அதையடுத்து வாக்குச்சாவடி முன்பாக அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப் பகுதியில் பதற்றம் நிலவியது. அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் மற்றும் தோ்தல் அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com