மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் தற்கொலை

பேரையூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரையூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே உள்ள பெரிய கட்டளையை சோ்ந்தவா் மகாராஜன் (63). இவருக்கு திருமணமாகவில்லை. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை முதல் மகாராஜனை வீட்டில் காணவில்லை. அவரை உறவினா்கள் தேடிவந்த நிலையில், புதன்கிழமை பெரியகட்டளை அருகில் உள்ள கிணற்றில் மகாராஜன் சடலமாக இறந்து கிடந்தாா். இச்சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீஸாா் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com