வலையபட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா

உசிலம்பட்டி அருகே வலையபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது .
வலையபட்டியில் பங்குனி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை முளைப்பாரி எடுத்துவந்த பெண்கள்.
வலையபட்டியில் பங்குனி திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை முளைப்பாரி எடுத்துவந்த பெண்கள்.

உசிலம்பட்டி அருகே வலையபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது .

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருவிழா எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பால், நெய், இளநீா், மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பொருள்கள் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. கரகம், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் பக்தா்கள் நோ்த்தி கடன் செலுத்தினா். சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com